Thursday, 6 August 2020

Facts of 90's

Before and after 90's:


               People born in 90's are the most unique generation of all time...

Do you know why...?


               They are in-between two generations: The one before the internet and the generation after. The generation before 90's went to old school and believed in working hard. The generation after 90's believes in working smart.


90's saw it all:

Radio

TV

Mario

Waptrick

Nokia

Nintendo 64

Samsung

iPhone

Tape

CD

DVD

Netflix

Snapchat

emojis

virtual reality


                The generation before 90s familiar with simple emails asking for money and offering love. But after 90's knows emails for serious stuff, social media and financial transactions.


                "90's born people knows the tradition and question it and picking from it what make sense to them. But the people before 90's knew no questions and the people after 90's knows no tradition."


               "அந்த காலத்து குருவி ரொட்டில இருந்து இந்த காலத்து குற்குறே(Kurkure) வரைக்கும் எல்லாத்தையும் சாப்பிட்டு வளர்ந்தவர்கள்!"😋


90's chocolate
90's Favo


               90's people can understand both sides from experience and they are running the world!!!


















Wednesday, 5 August 2020

இருக்கு ஆனா இல்லை!!!


அது இருந்தால் இது இல்லை!
இது இருந்தால் அது இல்லை!!



"வாடாமல்லிக்கு ஆயுள் அதிகம்

ஆனால் வாசம் இல்லை

மல்லிகைக்கோ வாசம் அதிகம்

ஆனால் ஆயுள் இல்லை"


ம்ம் ம்ம் ம்ம் ........


"கொம்புள்ள மானுக்கோ வீரம் இல்லை

வீரமுள்ள கீரிக்கு கொம்பு இல்லை

கருங் குயிலுக்கு தோகை இல்லை

தோகையுள்ள மயிலுக்கோ இனிய குரல் இல்லை"


ம்ம் ம்ம் ம்ம் ........


"நீருக்கு நிறம் இல்லை

நெருப்புக்கு ஈரம் இல்லை

காற்றுக்கு உருவம் இல்லை

கதிரவனுக்கு நிழல் இல்லை"


"இருக்கு ஆனா இல்லை" என S.J.சூர்யா படத்தில் சொல்வது போல்...


Irukku aanaa illai
இருக்கு ஆனா இல்லை


கால் இருக்கவனுக்கு சைக்கிள் இல்லையேன்னு கவலை...

சைக்கிள் இருக்கவனுக்கு கார் இல்லையேன்னு கவலை...

கார் இருக்கவனுக்கு பஸ் இல்லையேன்னு கவலை...

பஸ் இருக்கவனுக்கு ட்ரெயின் இல்லையேன்னு கவலை...

ட்ரெயின் இருக்கவனுக்கு flight இல்லையேன்னு கவலை...

Flight இருக்கவனுக்கு சந்திரனுக்கு போக விண்கலம் இல்லையேன்னு கவலை...!!!


இவை எல்லாவற்றையும் இழந்தாலும் பிழைக்க கால் இருக்கு என்று நம்பி முயற்சி செய்பவன் தான் வாழ்வில் வெற்றி பெறுவான்...


எல்லாருடைய வாழ்விலும் ஒன்றைப் பெற்றும், ஒன்றை இழந்தும் இருக்கலாம். எல்லாவற்றிற்கும், ஏதோ ஒரு காரணம் இருப்பதை மட்டும் நம்புங்கள். அந்த காரணம் நல்லதாகவே இருக்கும் என புரிந்து கொண்டு வாழுங்கள்...


"எது இருந்தாலும்! இல்லாவிட்டாலும்!! உங்கள் புன்னகையை மட்டும் என்றும் மறந்துவிடாதீர்கள்!!!"



 ஸ்மைல் பிலிஸ்...😃

SMILE PLEASE...💕



Tuesday, 4 August 2020

விழுவதும் அழகே!!!

விழுவதும் அழகே!!!



ஆம்! விழுவதும் ஒருவகையில் அழகே...!!!


"எழுவதில் அழகு இமயமென்றால்...

விழுவதில் அழகு அருவி...!!!"


Waterfalls near me
Water falls for a new beginning!


" வளைவதில் அழகு வில்லென்றால்...

வளைந்து கொடுப்பதில் அழகு மனிதன்...!!!"


--> வளைந்து கொடுப்பதால் நீ வீழ்வதும் இல்லை.... விழுவதால் அருவி வளைந்து கொட்டுவதும் இல்லை...


"விழுவதும்! வளைவதும்!! நம்முடைய

தன்மையே அன்றி, பிறர் மீது உள்ள பயம் அல்ல...!!!"





Monday, 3 August 2020

பட்டாம்பூச்சி ஏனடா??? ஆமையைப் போல் வாழட!!!

பட்டாம்பூச்சி ஏனடா???


       வாழ்க்கைப் பட்டாம்பூச்சியைப் போல் வண்ணமாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும் என்று பலர் ஆசைப்படுவர். ஆனால், அவர்கள் வாழ்வோ ஆமையை போல் மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதை எண்ணி வருந்துவர்...


           பட்டாம்பூச்சி தன் கூட்டிற்குள் வளரும் காலமோ வெறும் இருபத்து ஒரு நாட்கள் மட்டுமே. வளர்ந்து பூமியில் சில பகுதியைச் சுற்றித் திரியும் காலமோ ஓரிரு மாதங்கள் தான்... ஆனால், ஆமை  ண்பது ஆண்டு காலம் கடலின் ஆழத்தில் வளம் வந்து, அக்கடலையே கடக்கும் வலிமை வாய்ந்தது...


             நீங்கள் ஆமையை போல் மெதுவாக நகர்ந்தாலும் பரவாயில்லை... பட்டாம்பூச்சியைப் போல் வேகமாக சுற்றித்திரிய வேண்டும் என்று எண்ணி அழிந்துவிடாதீர்கள்...


Tortoise Turtle images
TORTOISE


             பட்டாம்பூச்சியை போல் colourful la இருக்க வேண்டும் என்று நீங்கள் ஓடினாள் தோல்வி தான் மிஞ்சும்... ஆமையைப் போல் careful la இருக்க வேண்டும் என்று ஓடி பாருங்கள்... வெற்றி கிட்ட நேரம் எடுத்தாலும்...! தோல்வி ஒரு நாளும் உங்களை துரத்ததாது...!!!



  "Don't be a Butterfly & waste your life in days, 

Be a Tortoise & live your life for centuries by exploring the ocean(world)..."


       



Sunday, 2 August 2020

Friendship day in India - நண்பர்கள் தினம்

நண்பர்கள் தினம்:


                             என்னடா இரண்டு நாலு முன்னாடி தான friendship day வந்துச்சு மறுபடியும் இன்னைக்கு friendship day வருதுனு பாத்தா... இன்னைக்கு இந்தியாவில் நண்பர்கள் தினமாம்.... ஆம்.... ஆகஸ்ட் முதல் ஞாயிற்று கிழமையை தான் நாம் நண்பர்கள் தினமாக கொண்டாடுகிறோம். இதை பார்த்த பிறகு சும்மா இருக்க முடியுமா... சொல்லுங்க நண்பர்களே!!! சோ, வாட் ஐ டூ இஸ்... விஷ் பண்ணிட்டு போலாம்னு வந்துருக்கேன்....

                   நண்பர்கள் தினம் என வந்துவிட்டால் தற்போதைய இளைஞர்கள் கேக் வெட்டுவது, பைக் எடுத்து ஊரைச் சுற்றுவது என பல்வேறு விதமாக கொண்டாடுகிறார்கள். 

      
                  ஆனால், 90's kids ஆன நாங்கள் பத்து ரூபாய்க்கு friendship band வாங்கி கையில் கட்டி விட்டு...

Friendship day in india
Friendship day

                    கடலைமிட்டாய், தேன்மிட்டாய், கமரகட்டு, இன்னும் பல ஐம்பது பைசா மிட்டாய்களை வாயில் போட்டுக் கொண்டு...

"பாசம் வைக்க நேசம் வைக்க
தோழன் உண்டு வாழ வைக்க
அவனைத் தவிர உறவுக்காரன்
யாரும் இங்கில்லே..."

"உள்ள மட்டும் நானே
உசிரைக் கூடத்தானே
என் நண்பன் கேட்டால்
வாங்கிக்கன்னு சொல்லுவேன்..."

"என் நண்பன் போட்ட சோறு
நிதமும் தின்னேன் பாரு
நட்பைக் கூட கற்பைப்போல எண்ணுவேன்..."

               -னு பாட்டு பாடிச் சுற்றியவர்கள்...

                 அட! அட!! என்ன வரிகள்...!!!

              அந்த காலத்து பாடல் வரிகள் நட்பின் மேன்மையை உணர வைக்கிறது...

          இத விட"தளபதி" படத்தில் ஒரு டயலாக் வரும் பாருங்க...

"நட்புனா என்னனு தெரியுமா உனக்கு...?!
நண்பனா என்னனு தெரியுமா உனக்கு...?!
சூர்யானா என்னனு தெரியுமா உனக்கு...?!"

                   என்று சூப்பர் ஸ்டார் சொல்லும் பொழுதும் நட்பின் மீது உள்ள நம்பிக்கையை நம்மால் உணர முடகின்றது...

                அதிற்காக 2k kids ஐ நான் குறை கூறவில்லை... " நண்பன்ல ஏது மா? நல்ல நண்பன்,  கெட்ட நண்பன்... ?? நண்பனாலே நல்லவன் தான்...😍"

                எனது Blog ஐ படிக்கும் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழத்துக்கள்...!!! 
(குறைந்த நேரத்தில் எழுதியது. எனது நண்பர்களை பற்றி பின்பு ஒரு Blog எழுதுகிறேன்...)






Nature is a dream! இயற்கை தான் கனவு!

இயற்கை தான் கனவு!


                       நானும் என் தோழியின் தங்கையும் காரில் வேலூர் சென்ற போது எடுத்த புகைப்படம் இது...

Nature is a dream
இயற்கை தான் கனவு!

                      "பஞ்சு மிட்டாயை போல் இருக்கும் மேகக் கூட்டங்களைப் பார்க்கும் போது... அப்படியே கையில் எடுத்து ருசிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் வருகிறது...!" நான் இவ்வளவு அழகாக புகைப்படம் எடுப்பேன் என்று தெரிந்திருந்தால்... நான் சினிமாவில் சேர்ந்த்திருப்பேன்!"  ம்ம்...  "இந்தப் படம் என்ன அவ்வளவு அழகாகவா இருக்கிறது என்று நீங்கள் மனதில் நினைப்பது எனக்கு கேட்கிறது..."  யார் என்ன சொன்னாலும் "காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு போல்." நான் எடுத்த இந்தப் புகைப்படம் எனக்கு அழகாக தான் தெரிகிறது...!!

                        புகைப்படத்தை பார்த்த படியே கனவுக்குள் நான்.........

                       "என்னைச் சுற்றி தென்னை மரங்களும், வயல்களும், காற்றில் அசைந்தாட, ஒரு சிறிய வீடொன்று எனக்கென்று சொந்தமாய் இருக்க, வயல் சேற்றின் வாசம் காற்றில் மூக்கைத் தொலைக்க, ஆடு,மாடு, கோழி எல்லாம் உற்சாகமாய் சத்தம் போட, வானத்தைப் பார்த்து கண்ணை மூடிய படி கயிறு கட்டிலில் நான் படுத்துக் கொண்டிருக்க, மனம் நிம்மதியாய் அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தது...!"

                          என் மன நிம்மதியை எந்தக் கோட்டையைப் பிடித்தாலும் என்னால் அடைய இயலாதது போன்று ஒரு எண்ணம்.... அதை எல்லாம் அனுபவைத்துப் பார்த்தால் தான் உங்களுக்கு புரியும். "நீ என்ன எல்லாவற்றையும் அனுபவைத்து விட்டாயா?" என்று கேட்காதீர்கள். என் கனவிற்கு எல்லையே இல்லை...             

                           திடீரென்று ஒரு குரல்! இளநீர் குடிக்க வாடி என்று அம்மா அழைத்தால். "என் கனவை களைப்பதே இவளுக்கு வேலை என்று புலம்பியபடி சென்றேன்..."

                           நாங்கள் இருப்பதோ வயல்கள் இல்லாத கட்டிட மாடி வீட்டில். நாங்கள் வீடு கட்டி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் பத்தாம் வகுப்பு படித்த போது கட்டியது... பத்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் தெருவில் எந்த ஒரு வீடும் இருக்காது. சுற்றி மாங்காய் மரங்களும், மண் தரையுமாய் இருந்தன.. ஆனால், இப்பொழுதோ ஒரு  மாங்காய்மரத்தையும் காணோம், எல்லாம் ஃபிளாட்டாக (flat) மாறிவிட்டது. மாலை நேரங்களில் மாங்காய் மரத்திலிருந்து "ஜில்" "ஜில்" என்று வீசிய காற்று இன்றும் என் நினைவில் பதிந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது எல்லாவற்றையும் கனவில் மட்டுமே காணமுடிகிறது....

        "நகரம்" "நரகம்" ஆகும்.

            " கரம்" மாறினால்!!! 


                   என்ற சந்தான பாரதியின் கூற்று சரியாகத் தான் உள்ளது?! (நான் "க" இடம் பெயர்தலை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்...)

By,.   
JAANU

Saturday, 1 August 2020

ஸ்பைடர் மேன் தினம் (SPIDER MAN DAY) in tamil

SPIDER MAN:


              ஸ்பைடர் மேன் (SPIDER MAN) என்றாலே நம் (90's kids) நினைவிற்கு வருவது ஸ்பைடர்மேன் படத்தில் நடித்த  TOBEY MAGUIRE தான். 

Spider man Tobey maguIre
Spider man(TobeyMaguire)

              ஸ்பைடர் மேன் படத்தில் பீட்டர் பார்கராக நடித்தவர்  TOBEY MAGUIRE. ஆனால் ஸ்பைடர் மேன் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியவர் பற்றி உங்களுக்கு தெரியுமா!?

சூப்பர் ஹீரோ உருவாக்கம்:


                சூப்பர் ஹீரோவாக, கற்பனை செய்யப்பட்ட கதபாத்திரமே ஸ்பைடர் மேன். அக்கதாபாரத்தினை Stan Lee மற்றும் Steve ditko என்பவரால் உருவாக்கப்பட்டது.

               அவர்கள் ஸ்பைடர் மேன் என்ற கதாபாத்திரத்தை ஆகஸ்ட் மாதம் 1962 ஆம் ஆண்டு "AMAZING FANTASY" என்ற நகைச்சுவை புத்தகத்தில் அறிமுகப்படுத்தினர்.

                அவர்கள் எழுதிய கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது தான் SPIDER MAN (2002) என்கிற திரைப்படம். இதில் ஒரு அமெரிக்கா இளைஞனாக நடித்தவர் TOBEY MAGUIRE.  இந்த படத்தை SAM RAIMI என்பவர்  இயக்கினார்.  2002 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று 100 மில்லியன் டாலரை ஒரு வார இறுதிக்குள் கொடுத்தது.

கதை சுருக்கம்:


                     ஸ்பைடர் மேன் படத்தில் "பீட்டர் பார்கர்" என்ற இளைஞன், தனது பெற்றோரை இழந்து அத்தை "May" மற்றும் மாமா "Ben" வுடன் நியூ யார்க்கில் வாழ்ந்து வருகிறார்.  பள்ளி பயணமாக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மரபியல் ஆய்வகத்திற்கு தனது நண்பன் osborn மற்றும் அவரது காதலி Mary Jane watson ஆகியோரோடு செல்கிறார். அங்கே மரபுசார் வடிவமைப்பு பெற்ற சூப்பர் சிலந்தி (Genetically Modified Super Spider) ஒன்று பீட்டரை கையில் கடித்திவிடுகிறது. அவர் சாதாரண சிலந்தி என்று பெரிதாய் பொருட்படுத்தவில்லை. 

                       அடுத்த நாள் காலை எழுந்து பார்த்த பொழுது, அவரால் கண்ணாடி (specs) இல்லாமல் அனைத்தையும் சுலபமாக பார்க்க முடிந்தது... அது மட்டும் இல்லாமல் அவரது உடல் நல்ல கட்டுடன் இருப்பதை கண்டு ஆசரியப்பட்டார். பின், அவர் உடல் சிலந்தி வலையை உற்பத்தி செய்வதைக் கண்டுபிடிக்கிறார். முன்னை விட அதிகமான சக்தியை  தன் உடல் பெற்றிருப்பதை அவரால் உணர முடிகிறது.   சிலந்தியின் வேகம், வலிமை, வலையால் சுவரில் ஒட்டி கொள்வது, ஆபத்தான நேரங்களில் துள்ளியமாக செயல் படுவது, எதிரிகளை தன் சூப்பர் பவரால் வெல்வது ஆகிய காட்சிகளை பிரமிப்பூட்டும் வகையில் திரையி்ட்டு இயக்குணர்கள் சாதித்தனர்...

கருத்து:


               "Great power comes with great responsibility"!

                 "அதிக சக்தி கிடைத்தால் அதிக பொறுப்பும் வரும்"!

                 "இதில் வேடிக்கை  என்னவென்றால் படத்தைப் பார்த்துவிட்டு சிலந்தி கடித்ததால் நாமும் ஸ்பைடர் woman ஆக மாறிவிடலாம் என்று எண்ணியது தான்😂....!!!"

                  பின்  2004 ஆம் ஆண்டு ஸ்பைடர்மேன் 2(Spider Man 2)
மற்றும் 2007 ஆம் ஆண்டு ஸ்பைடர்மேன் 3(Spider Man 3) ஆகிய படத்தையும் அப்படக்குழு இயற்றியது. அதன் பின்னர் ஸ்பைடர் மேன் கதையை MARVEL COMICS என்ற நிறுவனம் தன் வசப்படுத்தி "AMERICA COMIC BOOKS"ல் வெளியிட்டது. பின் மார்வல் நிறுவனம் இயற்றிய கதைகள், படங்கள் எராலம்.

ஸ்பைடர் மேன் தினம்
Spider man

SPIDER MAN DAY:

        1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான AMAZING FANTASY யில் இடம் பெற்ற சூப்பர் ஹீரோவுக்காக இன்று ஸ்பைடர் மேன் தினம் என்று கொண்டாடப்படுகிறது.!!!  





;