Saturday, 8 August 2020

Parenting Tips to Fullfill Children's Wish in tamil

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.


               "தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும் படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்." என்று திருவள்ளுவர் தனது குறலில் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறிய படி பெற்றோர் நடந்து கொள்கின்றனரா என்பது தான் பெரிய ???

              சிறு வயதில் ஒரு குழந்தை மற்றவர் சொல்வதைக் கண்டு மருத்துவர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டுருக்கும். ஆனால், பாடச் சுமையால் படிப்பில் ஆர்வம் இழந்து நாளடைவில் அந்தக் குழந்தைத் தன் ஆசையை விடுத்து வேறு ஒன்றின் மேல் நாட்டம் கொள்ளும்.


               அவ்வாறு குழந்தை தன் ஆசையை மாற்றுமே ஆயின் அஃது அவர்களுக்கு தேவைப்படக் கூடிய அல்லது அவர்களே ஆசைப்பட்ட ஒன்று அல்ல என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து நான் சொல்வதைத் தான் நீ படிக்க/செய்ய வேண்டும் என்று​ கூறினால்... உங்களை என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை...


"பிறர் ஆசையை தன் ஆசையாய் கொண்டவன் இறைவன்...

பிறர் ஆசையைக் கொன்று தன் ஆசையைக் கண்டவன் அரக்கன்..."


                சில குழந்தைகள் தன்னால் முடியாது என்று எண்ணி தன் ஆசையை மாற்றிக் கொள்வர். உன்னால் முடியும் என்ற நம்பிக்கையை பெற்றோர் அவர்களுக்கு விதைப்போராயின், இமயம் கூட அவர்கள் காலடியில் தான்...


Parenting tips to fullfill child's wish
Parenting tips to fullfill child's wish


               பெற்றோர் தங்கள் குழந்தையின் கனவை உணர்ந்து, அவர்களுக்கு என்ன வரும், அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்து செயல்ப்பட்டீர்கள் என்றால் இந்த உலகில் எந்த ஆசையும் நிராசையாய் போக வாய்ப்பே இல்லை!!!


                  ஒரு மரமானது ஆரம்பத்தில் இருந்து நன்றாக பாதுகாகப்பட்டால் தான் கணி சுவையாக இருக்கும். அதே போல தான் பிள்ளைகளின் வாழ்க்கையும் இப்பொழுது நிதானமாக சிந்தித்து அவர்களுக்கு எதில் ஆர்வமோ அதில் சேர்த்து விட்டு எதிர்கால பலனை அனுபவையுங்கள்...  


                    Mark, Society என்று ஓடாமல் பெற்றப் பிள்ளையின் எதிர்காலத்தையும், அவர்களின் சந்தோசத்தையும் பற்றி சிந்தியுங்கள்...!



                               நன்றி!!!

 



Friday, 7 August 2020

Bore time joke!!!

மச்சினனின் மகத்தான பார்வை.......!

எனக்குத் திருமணமான வருடம். 
தினமும் அலுவலகம் செல்ல சைக்கிளைப் பயன்படுத்துவேன். 
வாசல் வரண்டாவில் சைக்கிளை வைத்திருப்பேன். 

கீழே ரோட்டிற்கு இறங்க மொத்தம் நான்கு படிகள். தினமும் அலுவலகம் செல்ல சைக்கிளை கீழே இறக்க வேண்டும்.  காலில் செருப்போடு சைக்கிளை இறக்கினால் சறுக்கி விட்டு விடும்.

எனவே காலில் செருப்பு இல்லாமல் சைக்கிளை கீழே இறக்குவேன். 
என் மனைவி, என் செருப்புகளை கையில் எடுத்து, கீழே வந்து தருவாள். நான் செருப்பை காலில் மாட்டிக்கொண்டு சைக்கிளில் அலுவலகம் செல்வேன். 

இது தினசரி நடக்கும் நிகழ்ச்சியாகும். 

ஒரு நாள் என் மைத்துனன், எங்கள் வீட்டிற்கு மூன்று நாட்கள் தங்குவதற்கு வந்தான்.

நான் தினமும் அலுவலகம் செல்ல சைக்கிளை எடுப்பதையும், என் மனைவி என் செருப்புகளை கையில் எடுத்து, கீழே வந்து கொடுப்பதையும் கவனித்து வந்தான்.

மூன்று நாட்கள் கழித்து, ஊருக்குப் போனவனை, என் மாமனார் மாப்பிள்ளை எப்படி என்று கேட்டுள்ளார். 

அதற்கு அவன் சொன்ன பதில்...

மாப்பிள்ளை மற்ற விஷயங்களில் நன்றாகத்தான் இருக்கிறார்.
"ஆனால், அக்கா கையில் செருப்பை எடுத்தால்தான், மாப்பிள்ளை ஆபீஸ் போகிறார்."😂

Bore time joke
BORE TIME JOKE!



Thursday, 6 August 2020

Facts of 90's

Before and after 90's:


               People born in 90's are the most unique generation of all time...

Do you know why...?


               They are in-between two generations: The one before the internet and the generation after. The generation before 90's went to old school and believed in working hard. The generation after 90's believes in working smart.


90's saw it all:

Radio

TV

Mario

Waptrick

Nokia

Nintendo 64

Samsung

iPhone

Tape

CD

DVD

Netflix

Snapchat

emojis

virtual reality


                The generation before 90s familiar with simple emails asking for money and offering love. But after 90's knows emails for serious stuff, social media and financial transactions.


                "90's born people knows the tradition and question it and picking from it what make sense to them. But the people before 90's knew no questions and the people after 90's knows no tradition."


               "அந்த காலத்து குருவி ரொட்டில இருந்து இந்த காலத்து குற்குறே(Kurkure) வரைக்கும் எல்லாத்தையும் சாப்பிட்டு வளர்ந்தவர்கள்!"😋


90's chocolate
90's Favo


               90's people can understand both sides from experience and they are running the world!!!


















Wednesday, 5 August 2020

இருக்கு ஆனா இல்லை!!!


அது இருந்தால் இது இல்லை!
இது இருந்தால் அது இல்லை!!



"வாடாமல்லிக்கு ஆயுள் அதிகம்

ஆனால் வாசம் இல்லை

மல்லிகைக்கோ வாசம் அதிகம்

ஆனால் ஆயுள் இல்லை"


ம்ம் ம்ம் ம்ம் ........


"கொம்புள்ள மானுக்கோ வீரம் இல்லை

வீரமுள்ள கீரிக்கு கொம்பு இல்லை

கருங் குயிலுக்கு தோகை இல்லை

தோகையுள்ள மயிலுக்கோ இனிய குரல் இல்லை"


ம்ம் ம்ம் ம்ம் ........


"நீருக்கு நிறம் இல்லை

நெருப்புக்கு ஈரம் இல்லை

காற்றுக்கு உருவம் இல்லை

கதிரவனுக்கு நிழல் இல்லை"


"இருக்கு ஆனா இல்லை" என S.J.சூர்யா படத்தில் சொல்வது போல்...


Irukku aanaa illai
இருக்கு ஆனா இல்லை


கால் இருக்கவனுக்கு சைக்கிள் இல்லையேன்னு கவலை...

சைக்கிள் இருக்கவனுக்கு கார் இல்லையேன்னு கவலை...

கார் இருக்கவனுக்கு பஸ் இல்லையேன்னு கவலை...

பஸ் இருக்கவனுக்கு ட்ரெயின் இல்லையேன்னு கவலை...

ட்ரெயின் இருக்கவனுக்கு flight இல்லையேன்னு கவலை...

Flight இருக்கவனுக்கு சந்திரனுக்கு போக விண்கலம் இல்லையேன்னு கவலை...!!!


இவை எல்லாவற்றையும் இழந்தாலும் பிழைக்க கால் இருக்கு என்று நம்பி முயற்சி செய்பவன் தான் வாழ்வில் வெற்றி பெறுவான்...


எல்லாருடைய வாழ்விலும் ஒன்றைப் பெற்றும், ஒன்றை இழந்தும் இருக்கலாம். எல்லாவற்றிற்கும், ஏதோ ஒரு காரணம் இருப்பதை மட்டும் நம்புங்கள். அந்த காரணம் நல்லதாகவே இருக்கும் என புரிந்து கொண்டு வாழுங்கள்...


"எது இருந்தாலும்! இல்லாவிட்டாலும்!! உங்கள் புன்னகையை மட்டும் என்றும் மறந்துவிடாதீர்கள்!!!"



 ஸ்மைல் பிலிஸ்...😃

SMILE PLEASE...💕



Tuesday, 4 August 2020

விழுவதும் அழகே!!!

விழுவதும் அழகே!!!



ஆம்! விழுவதும் ஒருவகையில் அழகே...!!!


"எழுவதில் அழகு இமயமென்றால்...

விழுவதில் அழகு அருவி...!!!"


Waterfalls near me
Water falls for a new beginning!


" வளைவதில் அழகு வில்லென்றால்...

வளைந்து கொடுப்பதில் அழகு மனிதன்...!!!"


--> வளைந்து கொடுப்பதால் நீ வீழ்வதும் இல்லை.... விழுவதால் அருவி வளைந்து கொட்டுவதும் இல்லை...


"விழுவதும்! வளைவதும்!! நம்முடைய

தன்மையே அன்றி, பிறர் மீது உள்ள பயம் அல்ல...!!!"





Monday, 3 August 2020

பட்டாம்பூச்சி ஏனடா??? ஆமையைப் போல் வாழட!!!

பட்டாம்பூச்சி ஏனடா???


       வாழ்க்கைப் பட்டாம்பூச்சியைப் போல் வண்ணமாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும் என்று பலர் ஆசைப்படுவர். ஆனால், அவர்கள் வாழ்வோ ஆமையை போல் மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதை எண்ணி வருந்துவர்...


           பட்டாம்பூச்சி தன் கூட்டிற்குள் வளரும் காலமோ வெறும் இருபத்து ஒரு நாட்கள் மட்டுமே. வளர்ந்து பூமியில் சில பகுதியைச் சுற்றித் திரியும் காலமோ ஓரிரு மாதங்கள் தான்... ஆனால், ஆமை  ண்பது ஆண்டு காலம் கடலின் ஆழத்தில் வளம் வந்து, அக்கடலையே கடக்கும் வலிமை வாய்ந்தது...


             நீங்கள் ஆமையை போல் மெதுவாக நகர்ந்தாலும் பரவாயில்லை... பட்டாம்பூச்சியைப் போல் வேகமாக சுற்றித்திரிய வேண்டும் என்று எண்ணி அழிந்துவிடாதீர்கள்...


Tortoise Turtle images
TORTOISE


             பட்டாம்பூச்சியை போல் colourful la இருக்க வேண்டும் என்று நீங்கள் ஓடினாள் தோல்வி தான் மிஞ்சும்... ஆமையைப் போல் careful la இருக்க வேண்டும் என்று ஓடி பாருங்கள்... வெற்றி கிட்ட நேரம் எடுத்தாலும்...! தோல்வி ஒரு நாளும் உங்களை துரத்ததாது...!!!



  "Don't be a Butterfly & waste your life in days, 

Be a Tortoise & live your life for centuries by exploring the ocean(world)..."


       



Sunday, 2 August 2020

Friendship day in India - நண்பர்கள் தினம்

நண்பர்கள் தினம்:


                             என்னடா இரண்டு நாலு முன்னாடி தான friendship day வந்துச்சு மறுபடியும் இன்னைக்கு friendship day வருதுனு பாத்தா... இன்னைக்கு இந்தியாவில் நண்பர்கள் தினமாம்.... ஆம்.... ஆகஸ்ட் முதல் ஞாயிற்று கிழமையை தான் நாம் நண்பர்கள் தினமாக கொண்டாடுகிறோம். இதை பார்த்த பிறகு சும்மா இருக்க முடியுமா... சொல்லுங்க நண்பர்களே!!! சோ, வாட் ஐ டூ இஸ்... விஷ் பண்ணிட்டு போலாம்னு வந்துருக்கேன்....

                   நண்பர்கள் தினம் என வந்துவிட்டால் தற்போதைய இளைஞர்கள் கேக் வெட்டுவது, பைக் எடுத்து ஊரைச் சுற்றுவது என பல்வேறு விதமாக கொண்டாடுகிறார்கள். 

      
                  ஆனால், 90's kids ஆன நாங்கள் பத்து ரூபாய்க்கு friendship band வாங்கி கையில் கட்டி விட்டு...

Friendship day in india
Friendship day

                    கடலைமிட்டாய், தேன்மிட்டாய், கமரகட்டு, இன்னும் பல ஐம்பது பைசா மிட்டாய்களை வாயில் போட்டுக் கொண்டு...

"பாசம் வைக்க நேசம் வைக்க
தோழன் உண்டு வாழ வைக்க
அவனைத் தவிர உறவுக்காரன்
யாரும் இங்கில்லே..."

"உள்ள மட்டும் நானே
உசிரைக் கூடத்தானே
என் நண்பன் கேட்டால்
வாங்கிக்கன்னு சொல்லுவேன்..."

"என் நண்பன் போட்ட சோறு
நிதமும் தின்னேன் பாரு
நட்பைக் கூட கற்பைப்போல எண்ணுவேன்..."

               -னு பாட்டு பாடிச் சுற்றியவர்கள்...

                 அட! அட!! என்ன வரிகள்...!!!

              அந்த காலத்து பாடல் வரிகள் நட்பின் மேன்மையை உணர வைக்கிறது...

          இத விட"தளபதி" படத்தில் ஒரு டயலாக் வரும் பாருங்க...

"நட்புனா என்னனு தெரியுமா உனக்கு...?!
நண்பனா என்னனு தெரியுமா உனக்கு...?!
சூர்யானா என்னனு தெரியுமா உனக்கு...?!"

                   என்று சூப்பர் ஸ்டார் சொல்லும் பொழுதும் நட்பின் மீது உள்ள நம்பிக்கையை நம்மால் உணர முடகின்றது...

                அதிற்காக 2k kids ஐ நான் குறை கூறவில்லை... " நண்பன்ல ஏது மா? நல்ல நண்பன்,  கெட்ட நண்பன்... ?? நண்பனாலே நல்லவன் தான்...😍"

                எனது Blog ஐ படிக்கும் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழத்துக்கள்...!!! 
(குறைந்த நேரத்தில் எழுதியது. எனது நண்பர்களை பற்றி பின்பு ஒரு Blog எழுதுகிறேன்...)






;